முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்று(06) முன்னெடுக்கப்படவுள்ளன.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி.பிரதீபன் நேற்று(05) குறித்த மனித புதைகுழியை பார்வையிட்டு, நிலைமைகளை ஆராய்ந்தார். இதனையடுத்து மனித புதைகுழி தொடர்பான கலந்துரையாடலொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தொல்லியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, சட்ட வைத்திய அதிகாரி கே.வாசுதேவ, சட்டத்தரணி ரனிதா ஞானராஜா, பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.
அகழ்வுப் பணிகளுக்கு வசதியாக தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு சாவடியொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.