Saturday, July 27, 2024
HomeTamilதந்தை வீட்டில் சுட்டுக்கொலை!

தந்தை வீட்டில் சுட்டுக்கொலை!

அநுராதபுரம் – பதவிய, மஹசென்புர பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர், தமது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவத்தில் மஹசென்புர பகுதியைச் சேர்ந்த சம்பத் (38) என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

தேங்காய் எண்ணெய் வர்த்தகம் செய்து வந்த இவர், இரவில் வீட்டில் இருந்தபோது இரண்டு உந்துருளிகளில் வந்த மூவர், ரீ56 ரக துப்பாக்கியால் அவரை சுட்டுக்கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் 119 க்கு கிடைத்த தகவலின் பிரகாரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றதுடன் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபரை பதவிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.

எனினும், அதற்கு முன்னதாகவே அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பதவிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular