உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி மார்ச் 09 ஆம் திகதி நடத்துவது குறித்து தீர்மானிப்பதற்காக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(24) கூடவுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று ஏற்கனவே ஆணைக்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் ஐவரும் தேர்தலுக்குத் தேவையான அனைத்து வர்த்தமானி அறிவித்தல்களிலும் ஏற்கனவே கையொப்பமிட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com