தெதுரு ஓயா வடிநிலத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் கணிசமான மழை பெய்து வருவதால், நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 16,800 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறும் கசிவு அதிகரிப்பு மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலைமையையும், தெதுரு ஓயாவின் நீரியல் நிலையங்களின் ஆற்று நீர் மட்டங்களையும் பகுப்பாய்வு செய்வதன் மூலம், வாரியபொல, நிக்கவெரட்டிய, மஹவ, கொபேகனே, பிங்கிரிய, பள்ளம, சிலாபம், ஆராச்சிக்கட்டுவ மற்றும் தெதுரு ஓயா பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இப்பிரதேசங்களில் வசிப்பவர்களும், அவ்வழியாகச் செல்லும் வாகன சாரதிகளும் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இது தொடர்பாக போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பேரிடர் முகாமைத்துவ அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.