அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இன்று காலை பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த பேருந்தொன்றுடன் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளார்.
விபத்தின் போது இவரது மோட்டார் வண்டியும் பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பொதுமயானத்திற்கு முன்பு இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்திய சாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com