சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிரான போராட்டத்தை தெற்கில் செய்துகாட்டினால் இணைந்து போராட முடியும் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகேவுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றிய உபதலைவர் இரா.தர்ஷன் தெரிவித்துள்ளார்.
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சம்பவத்தை கண்டித்து நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னரே அவர் இந்த நிபந்தனையை குறிப்பிட்டுள்ளார்.
தம்மால் கோரிக்கைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என வசந்த முதலிகே ஊடகங்களுக்கு தெரிவித்திருந்த போதிலும் தங்களது தரப்பில் இருந்து அவரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றிய உபதலைவர் இரா.தர்ஷன் தெரிவித்துள்ளார்.
வசந்தே முதலிகேயிடம் திட்டமிட்ட பௌத்தமயமாக்கல் உட்பட பத்து கோரிக்கைகளை உள்ளடக்கிய தகவல் அனுப்பப்பட்டது.
எனினும் ஊடக சந்திப்பொன்றில் நாம் கோரிக்கைகள் எதனையும் முன்வைக்கவில்லை என்று வசந்த முதலிகே கூறியிருக்கின்றார்.
இந்தநிலையில் தங்களது கோரிக்கைகளுக்காக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே இணைந்து வரப்போவதில்லை என்பதனை அவரது பதில் வெளிப்படுத்தியுள்ளதாகவும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றிய உபதலைவர் இரா.தர்ஷன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

