Saturday, July 27, 2024
HomeTamilடெங்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

டெங்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

டெங்கு தொடர்பான மற்றுமொரு மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த வருடத்தில் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் படி, நாட்டில் இந்த வருடத்தில் கிட்டத்தட்ட 58,500 டெங்கு நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக 50 வீதமான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதுடன், கம்பஹா மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாகும்.

இதன்படி, 47 டெங்கு அபாய வலயங்களை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மழைப்பொழிவு குறைந்தாலும், தினமும் புதிதாக டெங்கு பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

ஆண்டின் முதல் பாதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஆபத்தான விகிதத்தில் அதிகரித்துள்ளது.

நோய்த்தொற்றுகளின் வீதம் குறைந்துள்ள போதிலும், 2022 ஆம் ஆண்டில் உறுதிப்படுத்தப்பட்ட 76,000 டெங்கு நோயாளர்களை விட இந்த வருடத்தின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular