இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மதுபான அனுமதிப்பத்திரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள போதிலும், அதன் மூலம் மதுபானங்களின் விலையை அதிகரிக்க வாய்ப்பில்லை என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மதுபானசாலைகளை திறக்கும் காலத்தை அவ்வப்போது திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.