பிற மதங்களை அவமதித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (13) உத்தரவிட்டுள்ளார்.
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ டிசம்பர் முதலாம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக சென்ற போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.