மனித புதைக்குழி விவகாரத்தில் சர்வதேசம் நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று பாரிய பேரணியொன்று முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
![](https://lankanvibe.com/wp-content/uploads/2023/07/33-4-768x264-1.jpg)
இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், மதகுருமார், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
![](https://lankanvibe.com/wp-content/uploads/2023/07/22-5-768x289-1.jpg)
வர்த்தகர் சங்கங்கள், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கங்கள் உள்ளிட்ட பல சங்கங்களும் சிவில் அமைப்புக்களும் இதற்கு ஆதரவினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.