கோழி இறைச்சி, மீன், முட்டை மற்றும் தேங்காய் ஆகியவற்றின் விலைகள் சந்தையில் மீண்டும் ஒருமுறை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, ஆயிரம் முதல் ஆயிரத்து 200 ரூபாவாக நிலவிய கோழி இறைச்சி கிலோவொன்று ஆயிரத்து 500 ரூபா முதல் ஆயிரத்து 600 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.
![Chickens market](https://lankanvibe.com/wp-content/uploads/2023/04/Chickens_in_market-1024x836.jpg)
அத்துடன் சந்தையில் மீனின் விலையும் மீண்டும் ஒரு முறை அதிகரித்துள்ளது.
பேலியகொடை மீன் சந்தையில், கெலவல்லா கிலோவொன்று ஆயிரத்து 900 ரூபாவிற்கும், பலயா மீன் கிலோவொன்று ஆயிரத்து 400 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
![](https://lankanvibe.com/wp-content/uploads/2023/04/22-6368016ba7424.jpg)
இதேவேளை, முட்டைக்கு அரசாங்கம் விலை நிர்ணயம் செய்த போதிலும், முட்டை 53 ரூபா தொடக்கம் 55 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட உணவக உரிமையாளர் சங்க தலைவர் அசேல சம்பத், கோழி இறைச்சி, மீன், முட்டை மற்றும் தேங்காய் ஆகியவற்றின் விலைகள் மீண்டும் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.