இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங், சிறு குழந்தைகளுக்குத் தேவையான புற்றுநோய்க்கான மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்களை சுகாதார அமைச்சிடம் இன்று (12) கையளித்தார்.
53.03 மில்லியன் டொலர் பெறுமதியான இந்த மருந்துப் பொருட்கள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதாக அமைச்சு அறிவித்துள்ளது.