இலங்கை பேருவளை அண்டிய கடற்பரப்பில் நிலநடுக்கம்ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று மதியம் 1 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.7 ஆக பதிவாகியுள்ளதாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
களுத்துறை, பேருவளை, பாணந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சமூக ஊடகப் பயனாளிகள் தமக்கு சிறிய நடுக்கம் ஏற்பட்டதாக பதிவிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com
![](https://lankanvibe.com/wp-content/uploads/2023/03/Screenshot_20230330_133949_Twitter-849x1024.jpg)