மோட்டார் சைக்கிள் மரத்துடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு கொக்குவில் காவல்துறை பிரிவிலுள்ள குப்பிளாமடு பிரதேசத்தில் வீதியின் குறுக்கே உள்ள மழைநீர் வழிந்தோடும் வடிகான் பள்ளத்தின் ஊடாக பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (21) இரவு இந்த இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குப்பிளாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய லோகிதராஜா கோவிந்தராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
குறித்த நபர் சம்பவதினமான நேற்று இரவு 8.30 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது குப்பிளாமடு வீதியின் குறுக்கே உள்ள மழைநீர் வழிந்தோடும் பள்ளத்தில் இருந்து மேலே செல்லும் போது வீதியை விட்டு மோட்டார் சைக்கிள் விலகி மரத்துடன் மோதியதில் சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்துள்ளார்.
அதில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள சத்துருக் கொண்டான் பிரதேசத்தில் நேற்று இரவு வேன் வாகனம் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.