ஹிஜ்ரி 1444 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டில் எங்கும் தென்படாததன் காரணமாக, ரமழான் நோன்பு நாளை மறுதினம் (24) ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று (22) மாலை மஃரிப் தொழுகையை அடுத்து, கூடிய பிறைக்குழு மாநாட்டில் இம்முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, நாட்டின் எந்த பகுதிகளிலும் தலைபிறை தென்படவில்லை என்ற விடயம் பிறைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் நோன்பு ஆரம்பமாவதாக இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.