Saturday, July 27, 2024
HomeTamilநள்ளிரவு முதல் ஒருநாள் பணிப்புறக்கணிப்பு!!

நள்ளிரவு முதல் ஒருநாள் பணிப்புறக்கணிப்பு!!

திட்டமிட்டபடி இன்று (14) நள்ளிரவு முதல் ஒருநாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.விதானகே இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 5 கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புகையிரதம் ஒழுங்குப்படுத்தல் சேவையாளர்கள், புகையிரத நிலைய அதிபர்கள், இயந்திர சாரதிகள், தொழில்நுட்பவியலாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த பணிப்புறக்கணிப்பிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular