கண்டி – மடுல்கலை வட்டகலை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த பகுதியில் பயிர்ச்செய்கை பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்சார வேலியில் சிக்குண்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக தெல்தெனிய மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பன்விலை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.