Saturday, July 27, 2024
HomeTamilயாழில் மூளைக் காய்ச்சலால் ஒருவர் உயிரிழப்பு!!

யாழில் மூளைக் காய்ச்சலால் ஒருவர் உயிரிழப்பு!!

மூளைக் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணத்தில் கிராம சேவகர் ஒருவர் நேற்றைய தினம் (14) உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கிராம சேவகர் தீபாவளி தினத்தன்று மயங்கி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர், அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்றைய தினம் உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

மூளைக் காய்ச்சலினாலேயே மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular