Saturday, July 27, 2024
HomeTamilகூரிய ஆயுதங்களால் தாக்குதல் – ஒருவர் பலி!

கூரிய ஆயுதங்களால் தாக்குதல் – ஒருவர் பலி!

மொரட்டுவ – அங்குலான பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ள காவல்துறையினர்தெரிவித்துள்ளனர்.

கையடக்கத் தொலைபேசி தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன் உக்குன் என அழைக்கப்படும் சுதிர சம்பத் என்ற 26 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இதன்போது, அவரது உறவினர் ஒருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் தற்போது லுனாவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குறித்த இளைஞர், அங்குலானையில் உள்ள தமது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த போது நான்கு பேர் கொண்ட குழுவொன்று கூரிய ஆயுதங்களுடன் வந்து தாக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular