2023ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிக்கின்றார்.
பரீட்சைக்கான புதிய திகதியை அடுத்த வாரம் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.