பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
![](https://lankanvibe.com/wp-content/uploads/2023/05/State_Minister_04_23092022-1024x682.jpeg)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் பிரேமித பண்டார தென்னகோன் இப்பதவியில் செயற்படுவார் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று ஐக்கிய இராச்சியத்திற்கு சென்றதை அடுத்து அவரது இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
![RANIL](https://lankanvibe.com/wp-content/uploads/2023/05/342892124_555969816648086_8939685159719371389_n-980x1024.jpg)
பிரேமித பண்டார தன்னகோன் ஜனாதிபதியிடமிருந்து நியமனத்தைப் பெற்றுக்கொண்டதுடன், ஜனாதிபதி விக்கிரமசிங்க இலங்கை திரும்பும் வரை அப்பதவியில் செயற்படுவார்.
மே 6 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி விக்கிரமசிங்க பிரித்தானியாவிற்கு சென்றுள்ளார்.