Saturday, July 27, 2024
HomeTamilஜனாதிபதி விசேட உரை!!

ஜனாதிபதி விசேட உரை!!

ஜனாதிபதி பாராளுமன்றில் இன்று விசேட உரையாற்றவுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம், தேர்தல் முறைமை மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் என்பன தொடர்பில் அவர் கருத்துரைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் இடைக்கால நிர்வாக குழு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ள உத்தரவு தொடர்பில் இன்றைய தினம் பாராளுமன்றில் விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் இடைக்கால நிர்வாக குழு தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் சம்மி சில்வா தாக்கல் செய்துள்ள நீதிப் பேராணை மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இன்றைய தினம் பாராளுமன்றில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular