பலஸ்தீன மக்களுடான தமது ஆதரவை வெளிப்படுத்தியும், காஸாவில் இடம்பெற்றுவரும் தாக்குதல்களை நிறுத்துமாறு வலியுறுத்தியும் நேற்று (18) கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
உலகளாவிய நீதிக்கான இலங்கை ஊடகவியலாளர்கள் அமைப்பினால் இப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
போராட்டக்காரர்கள் கொழும்பில் அமைந்துள்ள பலஸ்தீன தூதரகத்தில் இருந்து ஐக்கிய நாடுகள் அலுவலகத்தை நோக்கி சென்று அங்கு கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, காஸா மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் அலுவலகப் பிரதிநிதியிடம் மகஜரொன்றைக் கையளிக்கப்பட்டது.