Saturday, July 27, 2024
HomeTamilபுலமைப்பரிசில் பரீட்சை முடிந்து 2 மணித்தியாலங்களுக்குள் வினாத் தாள்கள் வெளியானது எப்படி?

புலமைப்பரிசில் பரீட்சை முடிந்து 2 மணித்தியாலங்களுக்குள் வினாத் தாள்கள் வெளியானது எப்படி?

புலமைப்பரிசில் பரீட்சை நேற்று (15ஆம் திகதி) முடிவடைந்து இரண்டு மணித்தியாலங்களுக்குள் இரண்டு பரீட்சை தாள்களும் வெளியாகியிருந்தன.

பரீட்சை முடிந்து முடிவுகள் வெளியாகும் வரை இரண்டு மாதங்களுக்கும் மேலான காலப்பகுதியில், வினாத்தாள்கள் பரீட்சை திணைக்களத்திற்கு சொந்தமான இரகசிய ஆவணங்களாக பாதுகாக்கப்படும் . அதற்கு முன்னர் அவற்றை பகிரங்கப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்த நடைமுறை 2017ஆம் ஆண்டு அப்போதைய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமாரவின் காலத்தில் கொண்டுவரப்பட்டது.

தனியார் ஆசிரியர்கள் பரீட்சைக்குப் பிறகு, தாள்களை பகிரங்கமாக விவாதிப்பது மற்றும் போன்ற போக்கைக் கட்டுப்படுத்த இது போன்ற ஒரு விதி அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular