பல்வேறு மின்சார சேவை தொழிற்சங்கங்கள் மின்சார சபையின் வருடப்பூர்த்திக்கு இணையாக ஆர்ப்பாட்ட பேரணியொன்றை இன்று (01) முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளன.
திவுலப்பிட்டியவிலிருந்து கொழும்பிற்கு பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.
மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து திவுலப்பிட்டியவில் இருந்து மின்சக்தி அமைச்சு வரை முன்னெடுக்கப்படவுள்ள எதிர்ப்பு பேரணியை தடுப்பதற்கு பொலிஸார் முயற்சிக்கின்றனர் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.