இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மாதகல் – மாரீசன் கூடல் பகுதியில் நேற்றிரவு 150 கிலோ எடையுடைய கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. எனினும் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
அத்துடன் குறித்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் படகு ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கஞ்சா கடத்தலுடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படாத நிலையில் மீட்கப்பட்ட கஞ்சா சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com