ஹற்றன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பிரதேசத்தில் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற் கொண்டு பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஹற்றன் வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹற்றன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் இன்றும் மூடப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக ஹற்றன் மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.