Saturday, July 27, 2024
HomeTamilமழையினால் இரண்டாவது ஒருநாள் போட்டி நிறுத்தம்!

மழையினால் இரண்டாவது ஒருநாள் போட்டி நிறுத்தம்!

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்டது.

நியூஸிலாந்தின், கிறைஸ்ட்சேர்ச் விளையாட்டரங்கில் இன்று இடம்பெறவிருந்த இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு இன்று காலை முதல் மழை குறுக்கிட்டதால் போட்டியை ஆரம்பிப்பதற்கு தடை ஏற்பட்டது.

இரவு – பகல் போட்டியாக இடம்பெறவுள்ள இந்த போட்டி உள்ளூர் நேரத்தின்படி, பிற்பகல் 2 மணிக்கு (இலங்கை நேரம் காலை 6.30) ஆரம்பிக்க திட்டமிடப்பட்டது. எனினும், தொடர்ந்து அப்பகுதியில் மழை பெய்து வருவதாக போட்டியை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒக்லேண்டில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து 198 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முன்னிலை வகிக்கிறது.

மூன்றாவது போட்டி ஹமில்டனில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular