எதிர்காலத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
தண்ணீரை வீண் விரயம் செய்தல், சுற்று சூழல் மாசுப்பாடு, மற்றும் பருவ நிலை மாற்றம் ஆகிய காரணிகளால் குடிநீருக்கான தட்டுப்பாடு ஏற்படுவதற்கு சாத்தியம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
அத்துடன் உலக சனத்தொகையில் 10 வீதமானோர் தற்பொழுதும் குடிநீர் பற்றாக்குறையை எதிர்நோக்குவதாகவும் அந்த சபை தெரிவித்துள்ளது.
குடிநீர் பற்றாக்குறைக்கான பிரதான காரணியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள சூழல் மாசுபாடு தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுவது அவசியமாகும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.