வடக்கில் உள்ள வைத்தியசாலைகளில் சில மருந்து பொருட்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதனால் நோயாளிகள் அசௌரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இருப்பினும் சுகாதார அமைச்சின் மருந்துவ பிரிவுக்கு பொறுப்பானவர்கள் தொடர்ச்சியாக மருந்துகளை அனுப்பி கொண்டிருக்கின்றார்கள்.
சில மருந்துகளுக்கு திடீரென தட்டுப்பாடு ஏற்படுகின்றமையால் பொதுமக்கள் அந்த மருந்தை மருந்தகங்களில் கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.