Saturday, July 27, 2024
HomeTamilதந்தையால் மகன் துஷ்பிரயோகம்!!

தந்தையால் மகன் துஷ்பிரயோகம்!!

பதின்மூன்று வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அவரது தந்தையை அஹுங்கல்ல காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

குறித்த நபர் நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டுக்கு வந்து, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிறுவனை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படுகிறது.

சந்தேகநபர் தூங்கச் சென்றதும், வீட்டில் இருந்து வெளியே வந்த சிறுவன் வெளிநாட்டில் பணிபுரியும் தாயாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு சம்பவத்தை விபரித்துள்ளார்.

உடனடியாக செயற்பட்ட சிறுவனின் தாய், தனது சகோதரியிடம் விபரங்களை கூறி, அவருடன் சிறுவனை அழைத்துச் செல்லுமாறு கூறியதாக விசாரணைகளில் தெரியவருகிறது.

அதன்படி, நேற்று அஹுங்கல்ல காவல்நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரான தந்தை கைது செய்யப்பட்டதுடன், சிறுவனை சட்ட வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular