மின்சாரம், கனியவளம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் என்பவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து மீண்டும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய அவரது செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது,
இதற்கமைய மின்சார விநியோகத்துடன் தொடர்புடைய சகல சேவைகளும், கனிய எண்ணெய் உற்பத்தி மற்றும் அதன் விநியோகம் உள்ளிட்டவை அத்தியாவசிய சேவைகளாக கருதப்படும்.
இதுதவிர, மருத்துவ துறை சார்ந்த சகல செயற்பாடுகளும் அத்தியாவசிய சேவைகளாகும் என குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.