பொசன் வாரம் இன்று ஆரம்பமாகிறது. இந்த ஆண்டு தேசிய பொசன் உற்சவம், மிஹிந்தலை மற்றும் அனுராதபுரம் ஆகிய புனித பூமிகளை மையமாகக் கொண்டு நடைபெறுகின்றது.
![](https://lankanvibe.com/wp-content/uploads/2023/05/uttara-devi-express-train.jpg)
இதனை முன்னிட்டு அனுராதபுரத்திற்கான ரயில் சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது .
தற்போது அனுராதபுரத்திற்கு முன்னெடுக்கப்படும் 10 ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக மேலும் 10 ரயில் பயணங்கள் சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக அத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.