காஸா முழுவதும் இன்று தொலைத்தொடர்பு இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன தொலைத்தொடர்பு நிறுவனம் தெரிவிக்கின்றது.
இதன்படி, காஸா முழுவதும் தொலைபேசி மற்றும் இணையத்தள இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிடுகின்றது.
இந்த வாரத்தில் இரண்டாவது தடவையாக இவ்வாறு தொலைத்தொடர்பு இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வடக்கு காசாவில் மக்கள் செறிவான ஜபல்யா அகதிகள் முகாமில் ஹமாஸ் தளபதியை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல் பேரழிவு சேதத்தை ஏற்படுத்தியது ஏராளமான மக்களை இந்த தாக்குதல் பலி கொண்டதாக நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
“நான் உணவு வாங்க வரிசையில் காத்திருந்தேன், திடீரென்று எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் ஏழு முதல் எட்டு ஏவுகணைகள் விழுந்தன,” என நேரில் கண்ட சாட்சியான முகமது இப்ராஹிம் CNN அலைவரிசையிடம் தெரிவித்துள்ளார்.