வருடத்தின் இறுதிக் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் வலுவடையுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் பல்வேறு கணிப்புகளை முன்வைத்த போதிலும், அத்தகைய கணிப்புகளுக்கு அப்பால் நாட்டின் பொருளாதாரத்தை கடந்த வருடமும் நிர்வகிக்க முடிந்ததாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக வங்கியின் கணிப்பீட்டின அடிப்படையில், இந்த ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் மறை 4.2 வீதமென அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் மறை 3.0 ஆக இருக்குமென சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. எவ்வாறாயினும், மத்திய வங்கியின் கணிப்பீட்டின் அடிப்படையில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதம் மறை 2 – 3 இற்கும் இடையில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் உற்பத்திக்கான பங்களிப்பை அதிகரிக்க அனைவரும் உறுதியுடன் செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்பட்டால், வருடத்தின் இறுதிக் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் சாதகமானதாக இருக்கும்.
நேற்று(12) பிற்பகல் தெஹியோவிட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட உரையாற்றிய போதே இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தை தெரவித்துள்ளார்.