Saturday, July 27, 2024
HomeTamilதேர்தல் செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும்!!

தேர்தல் செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும்!!

உள்ளூராட்சி, மாகாண மற்றும் பாராளுமன்ற மட்டத்திலான தொகுதிகளை மீள் நிர்ணயம் செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ஒத்திவைக்கப்பட்ட தேர்தல்களில் ஒன்று செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

உலக ஜனநாயக தினம் செப்டெம்பர் 15ஆம் திகதி அனுசரிக்கப்படுகிறது. “உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவது நாட்டின் ஜனநாயகம் தொடர்பான பிரச்சினையாகும்” என தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபை அல்லது உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு அதிகாரிகள் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், மாகாண சபைகளை ஆளுநர்களின் கீழ் நிர்வகிப்பதும், உள்ளூராட்சி சபைகளை ஆணையாளர்களின் கீழ் நிர்வகிப்பதும் சட்டவிரோதமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular