அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கொடுப்பனவு இந்த மாதத்தில் இருந்து உரிய முறையில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அறிவித்துள்ளார்.
முன்னதாக, அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகள் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சு தகவல் வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், ஆட்சேபனைகள் மற்றும் மேன்முறையீடுகளை சமர்ப்பிக்காத அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளுக்கு இம்மாதம் முதல் உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
அத்துடன், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளர்களின் கொடுப்பனவுகளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.