விசாரணைகளை மேற்கொள்ளச் சென்றபோது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காவல்துறை சார்ஜன்ட் ஒருவர் உட்பட இரு காவல்துறை உத்தியோகத்தர்கள் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காத்தான்குடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை காலை காவல்துறையினரின் 119 அவசரசேவை பிரிவுக்கு தன்னை தனது கணவர் அடித்து துன்புறுத்துவதாக ஆரையம்பதி கிழக்கு பிரதேசத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
இதனையடுத்து, இரு காவல்துறையினர் வாகனத்தில் விசாரணைக்காக அந்த வீட்டிற்கு சென்றபோது அங்கு இருந்த வீட்டின் உரிமையாளரான மனைவியை தாக்கியநபர் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து காயமடைந்த இரு காவல்துறையினரும் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அங்கிருந்து ஒருவரை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்த தாக்குதல் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்துள்ளதாகவும் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த காத்தான்குடி காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com