மின் பாவனையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இலத்திரனியல் மின் கட்டண பட்டியல் முறையானது பல பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தெஹிவளை, இரத்மலானை, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர, மாத்தறை மற்றும் அம்பலாங்கொடை ஆகிய பிரதேசங்களில் உள்ள மின்சார பாவனையாளர்களுக்கு இந்த முறைமை ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார்.
இம்முறைமையானது எதிர்காலத்தில் ஏனைய பிரதேசங்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.