தம்மை பதவியில் இருந்து விலகுமாறு எந்த அறிவுறுத்தல்களும் ஜனாதிபதி தரப்பில் இருந்து தமக்கு விடுக்கப்படவில்லை என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
![](https://lankanvibe.com/wp-content/uploads/2023/05/22-62f028e8cb13c.png)
முன்னதாக வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட சில மாகாண ஆளுநர்களை குறித்த பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில், குறித்த விடயத்தின் உண்மைத்தன்மை தொடர்பில், வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவிடம் தென்னிலங்கை ஊடகம் ஒன்று வினவியது.
அதற்கு பதிலளித்த அவர், தமக்கு அவ்வாறான எந்தவொரு அறிவுறுத்தலும் கிடைக்கப்பெறவில்லை என அவர் குறிப்பிட்டார்.