கொழும்பில் உள்ள தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர்களினால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்கப் போராட்டம் இன்று காலை கைவிடப்பட்டதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
சுகாதார செயலாளருடனான கலந்துரையாடலின் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.