நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் நுவரெலியா பம்பரகெல டொப்பாஸ் பகுதியில் குளியாப்பிட்டியிலிருந்து நுவரெலியாவிற்கு கோழி உரத்தை ஏற்றிப் பயணித்த பாரவூர்தியொன்று பெரிய வளைவு பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த வீதியில் உள்ள வளைவு ஒன்றில் லொறி கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு வேலியையும் உடைத்துக்கொண்டு பள்ளத்தில் இருந்த தேயிலை தோட்டத்தில் விழுந்துள்ளது
இதன்போது, பாரவூர்தியின் சாரதி மற்றும் அவரின் இரு உதவியாளர் இருந்துள்ளனர். எனினும் அதிஸ்டவசமாக சிறு காயங்களுடன் மூவரும் தப்பியுள்ளதாக தெரிவிக்கிறனர்.
இதேவேளை பாரவூர்தியில் ஏற்பட்ட தொழினுட்ப கோராறு காரணமாக , வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது என மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் காவல்துறையினர்தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் இதற்கு முன்னரும் பல விபத்துக்கள் ஏற்பட்டதை கருத்தில் கொண்டு அங்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை வீதித்தடைகளை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
இவ்விபத்து, குறித்து மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.