Friday, July 26, 2024
HomeTamilதொழிற்சங்கங்கள் ஆதரவளிக்கப் போவதில்லை!!!!

தொழிற்சங்கங்கள் ஆதரவளிக்கப் போவதில்லை!!!!

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பிற்கு தனியார், அரச பேருந்து மற்றும் தொடரூந்து சேவை உள்ளிட்ட துறைகளின் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆதரவளிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளன.

எனினும் தொடருந்து இயக்கப் பணிகளில் பங்கேற்பதில்லையென லோகோமோடிவ் தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் தலைவர் கே.ஏ.யூ. கொன்தசிங்க கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும், அத்தியாவசிய பொதுமக்கள் சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தொடரூந்து சேவையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் நேற்று முதல் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில், தொடரூந்து சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு காவல்துறை பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் முன்னெடுக்கப்படுகின்ற பணிப்புறக்கணிப்புக்கு, 5 சங்கங்கள் ஆதரவளிக்காது என இலங்கை போக்குவரத்துச் சபையின் பொதுப் போக்குவத்து சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்றைய தினம், சுமார் 13 ஆயிரம் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular