Saturday, July 27, 2024
HomeTamilகணவரை கொலை செய்த மனைவி!!

கணவரை கொலை செய்த மனைவி!!

மாவனெல்லை பிரதேசத்தில் தனது கணவரை காரினால் மோதி கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் மனைவி மற்றும் மனைவியின் சட்டபூர்வமற்ற கணவர் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கடந்த 27ஆம் திகதி காரில் மோதி விபத்துக்குள்ளாகி மாவனெல்லை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த விபத்து திட்டமிடப்பட்ட கொலை என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் உயிரிழந்தவரின் மனைவி மற்றும் மனைவியின் சட்டபூர்வமற்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular