யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோப்பாய் காவல் துறைப் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் சந்தியில், பொது வெளியில் கஞ்சா போதைப்பொருளை பயன்படுத்திக் கொண்டிருந்த நிலையிலேயே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் திருநெல்வேலி மற்றும் ஜோகபுரம் பகுதியை சேர்ந்த 30 வயதுக்கு குறைந்தவர்கள் எனவும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து குறிப்பிட்ட அளவு கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com