அடுத்த மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்கம் தனது கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால் ‘முழு நேர வேலைநிறுத்தம்’ மேற்கொள்ளப்படும் என தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
உயர்கல்வி, மருத்துவம், வங்கி, துறைமுகம் மற்றும் பிற துறைகளில் அதிக வருமானம் ஈட்டும் அரசு ஊழியர்கள், அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராகத் தொடங்கப்பட்டுள்ள தொழிற்சங்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளனர்.
அடுத்த மாதம் 15ஆம் திகதிக்குள் அரசாங்கம் முடிவெடுக்க வேண்டும் அல்லது தண்ணீர் அல்லது மின்சாரம் வழங்கப்படாது, கப்பல்கள் வராது என பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்தின் (FUTA) ஊடகப் பேச்சாளர் சாருதத்த இளங்கசிங்க வியாழக்கிழமை (09) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நியாயமான வரிவிதிப்பு முறையை அறிமுகப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்திய இளங்கசிங்க, தொழிற்சங்கங்கள் இன்னும் கலந்துரையாடலுக்கு திறந்திருப்பதாகக் கூறினார்.
நாட்டில் அண்மையில் இடம்பெற்ற தொழிற்சங்கப் போராட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “நாங்கள் எடுத்த முதலாவது நடவடிக்கை இதுவாகும். நாங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நடவடிக்கையை எடுப்போம், அடுத்த மாதம் 15ஆம் தேதி தொழிற்சங்க நடவடிக்கைக்கு நேரம் வரும்.
தொழிற்சங்க நடவடிக்கையினால் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகக் கூறுவதுடன், இந்த இடையூறுகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்குமாறும் அவர் அரசாங்கத்தை மேலும் தெரிவித்தர்.
மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com