இன்று (12) நள்ளிரவு முதல் ரயில் அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடருந்து இயக்குநர்கள் சங்கம், முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்றைய தினத்தின் இதுவரையான காலப்பகுதியில் 36 தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தொடருந்து திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்தார்.
அலுவலக தொடருந்துகள் உள்ளிட்ட 36 சேவைகள் இவ்வாறு ரத்தாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் தொடருந்து இயக்குனர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றது.
இதனையடுத்து ரயில் அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.