மஹியங்கனை பிரதேசத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் நாளை (21) முதன்முறையாக யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா செல்ல ஆயத்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோ தலைமையில் 60 பேர் கொண்ட குழுவொன்று முதன்முறையாக யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.
இதுவே தனது முதல் யாழ்ப்பாண விஜயம் எனவும், யாழ்ப்பாணத்தின் பிரபல இடங்களை இரண்டு நாட்கள் பார்வையிட்டுவிட்டு தனது சொந்த ஊரான மஹியங்கனைக்கு திரும்பவுள்ளதாக ஆதிவாசிகளின் தலைவர் தெரிவித்துள்ளார்.