மீகொடையில் உள்ள தளபாடக் கடையொன்றில் நுழைந்த இரு கொள்ளையர்கள் சுமார் 6 மில்லியன் ரூபாவை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இருவரும் ஹெல்மெட் அணிந்து கடைக்குள் நுழைந்து பின்னர் டி-56 துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கியை காட்டி தொழிலாளர்களை மிரட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளையர்கள் காசாளரிடம் மிரட்டி லாக்கர் பாஸ் குறியீட்டைப் பெற்றுள்ளனர்.
சம்பவத்தையடுத்து, கொள்ளையர்கள் அப்பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.
மீகொட பொலிஸார் சிசிடிவி காட்சிகளை பெற்று குற்றவாளிகளை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.