கினிகத்தேன – பெரகஹமுல பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன், இதன்போது பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்றும் சிறிதளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும், தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com